மன்னாரைச் சேர்ந்த பேராதனை பல்கலைக்கழக மாணவன் விபத்தில் சிக்கி மரணம்!

editor 2

குளியலறையில் வழுக்கி விழுந்து பேராதனை பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்தார்.

மன்னாரை சேர்ந்த 23 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.

இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வந்தார் என்று தெரிய வருகின்றது.

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர், அவரின் அறையின் குளியலறையில் விழுந்துள்ள நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பேராதனை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னரே மாணவன் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article