இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர் இலங்கையில் சிக்கினார்!

editor 2

இந்தியாவில் இடம்பெற்ற பல பயங்கரவாதச் செயல்கள் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இந்தியாவுக்கு அவசியமாக தேவைப்படும் பயங்கரவாதி ஒருவரை இலங்கையில் கைது செய்து இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் இடம்பெற்ற பல பயங்கரவாதச் செயல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பாக இந்திய பாதுகாப்புப் படையினருக்கு தேவைப்படும் இவர், இந்திய பாதுகாப்புப் படையினரையும், இந்திய நீதிமன்றங்களையும் தவிர்த்து வருகிறார்.

குறித்த நபர் பங்களாதேஷிலிருந்து போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி ஒரு வருடத்துக்கு முன்னர் வேறு நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து வர்த்தகர் போன்று நடித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய பாதுகாப்புப் படையினரும் இலங்கைப் பாதுகாப்புப் படையினரும் இணைந்து நடத்திய நீண்ட கால விசேட புலனாய்வு நடவடிக்கையின் பின்னர் இந்த நபர் கைது செய்யப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share This Article