போதியளவு எரிபொருள் யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளது எனவும்
செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தவேண்டாம் என யாழ். மாவட்ட
பதில் அரசாங்க அதிபர் மக்களிடம் கேட்டுள்ளார்.
யாழ். மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதில் முண்டியடித்தனர்.
இந்நிலையிலேயே யாழ். மாவட்டபதில் அரச அதிபர் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
மேலும், யாழ். மாவட்டத்தில் திங்கட்கிழமை எரிபொருளுக்காக ஒரு செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கியிருப்பதாக அறிந்தேன். இன்றைய தினம்(நேற்று) அநுராதபுரத்திலிருந்து 23 பவுசர்களில், ஒரு பவுசரில் 6 ஆயிரத்து 63 லீற்றர் வீதம் ஒரு இலட்சத்து 51 ஆயிரத்து 800 லீற்றர் பெற்றோல் யாழ். மாவட்டத்துக்கு
எடுத்து வரப்பட்டுள்ளது.
குறித்த எரிபொருட்கள் யாழ். மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, நாளையும் (இன்று) இதே அளவான எரிபொருள் எடுத்து வரப்பட்டு யாழ். மாவட்டதிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இதேபோன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்ட காங்கேசன்துறை எரிபொருள் சேமிப்பு நிலையத்துக்கு தொடர்ச்சியாக எரிபொருள் எடுத்துவரப்பட்டு சேமிக்கப்பட்டு வருகின்றது ஆகவே, யாழ். மாவட்ட மக்கள் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாமென வேண்டுகோள் விடுக்கின்றேன் -என்றார்.