புதிய வாகன உரிமையாளர்களுக்கு வாகன இலக்கத் தகடுகள் வழங்குவதில் இரண்டுமாத கால தாமதம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
புதிய விநியோகஸ்தர்களிடமிருந்து இலக்கத் தகடுகளுக்கான கொள்முதல் கோரிக்கையை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் சமர்ப்பித்ததால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்குள் இந்த செயல்முறை நிறைவடையும் என்றும், அதன் பின்னர் இலக்கத் தகடுகள் வழங்கல் மீண்டும் தொடங்கும் என்றும்
மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் ஜெனரல் கமல் அமரசிங்க நம்பிக்கை தெரிவித்தார்.
அதுவரை,
புதிய வாகன உரிமையாளர்களின் பதிவு விவரங்களை உறுதிப்படுத்தும்
அச்சிடப்பட்ட காகித எண் தகடுகள் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் கடிதத்தை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம்
வழங்கும் என்றும், இந்த நடவடிக்கை குறித்து பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.