சர்வதேச நாணயநிதியம் தற்போது முன்னெடுக்கும் திட்டத்தை இலங்கைக்கு தேவைப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் இறுதித் திட்டமாக மாற்றுவோம் என அந்த நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் அங்கீகாரம் மற்றும் உறுதிப்பாடு குறித்த வலுவான செய்தியை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தேவைப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் இறுதித் திட்டமாக இது இருக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இலங்கை அனைத்து குடிமக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை
மேம்படுத்தும் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியின் பாதையை தொடருகின்ற நிலையில் சர்வதேச நாணய நிதியம் உறுதியான பங்காளியாகயிருக்கும் என அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தெரிவித்ததுபோல, இந்த நேரம் வித்தியாசமானதாகயிருக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர், இலங்கைக்கு
தேவைப்படும் இறுதி சர்வதேச நாணயநிதியத்தின் திட்டமாக இதனை மாற்றுவோம் எனவும் கூறினார்.
இலங்கை தற்போதைய பாதையில் தொடர்ந்தால் இது சாத்தியம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.