டீல் அரசியலை முடிவுக்கு கொண்டுவருவதாக கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த தரப்பினரே டீல் அரசியலில் ஈடுபட்டு வருவதாக பொதுஜன பெரமுனவின் தேசிய
அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன தலைமையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
மக்கள் ஆணைக்கு அமையவே உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருந்தோம். அந்த வகையில் சில
உள்ளூராட்சி மன்றங்களில் பொதுஜன பெரமுனவும் ஐக்கிய மக்கள் சக்தியும்
ஆட்சியமைத்துள்ளது.
இதேபோன்று சில உள்ளூராட்சி மன்றங்களில் தேசிய மக்கள் சக்தியும் பொதுஜன பெரமுனவும் ஆட்சியமைத்துள்ளன. தேர்தல் சட்டத்திற்கு அமைய அவ்வாறான முறைமையே காணப்படுகின்றது.
இத்தகைய பின்னணியில் மறுபுறமாக டீல் செய்வதற்கு மக்கள் விடுதலை முன்னணியினர் நன்கு பழக்கப்பட்டுள்ளனர்.
டீல் அரசியலை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த மக்கள் விடுதலை முன்னணியினரை பார்க்கிலும் டீல் அரசியலை மேற்கொள்பவர்களாக இருக்கின்றனர்-என்றார்.