நாகபட்டினம், காங்கேசன்துறை இடையே மேற்கொள்ளப்பட்டு வரும் பயணிகள் கப்பல் சேவையை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் ஒரு வருடத்துக்கு
நிதி உதவியை மேலும் நீடித்துள்ளது.
இது, பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்கும் இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
தூதரக தகவலின்படி, இந்திய செயல்திறன் இடைவெளி நிதியளிப்பு பொறிமுறையின் கீழ், இலங்கைக்கு ஆண்டுதோறும் 30 கோடி இந்திய ரூபாய்க்கும் (நம் நாட்டு மதிப்பில் சுமார் 100 கோடி ரூபாய்) அதிகமான தொகை வழங்கப்பட்டுவருகிறது.
இது, கடந்த ஆண்டைப் போலவே, முக்கிய செயல்பாட்டு செலவுகளை ஈடுகட்டுவதன் மூலம் கப்பல் சேவையின் மலிவு மற்றும் செயல்பாட்டு நிலைத்தன்மையை உறுதி செய்வதை இந்த நிதியளிப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதேவேளை, 2024ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்பட்டதிலிருந்து, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை, குறித்த
கப்பல் ஏற்றிச் சென்றுள்ளது என்றும் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.