KKS – நாகை கப்பல் சேவை இடைநிறுத்தம்!

KKS - நாகை கப்பல் சேவை இடைநிறுத்தம்!

editor 2

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

இன்றும் நாளையும் தமிழக கரையோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

அத்துடன், எதிர்வரும் 16ஆம் திகதி வரை தெற்கு தமிழக கடற்கரை மற்றும் அதனை அண்டிய பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு சுமார் 45 முதல் 65 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாகவே, இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை காங்கேசன் துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் சேவை, கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 

பின்னர், வடகிழக்கு பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23ஆம் திகதி முதல் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. 

இதனையடுத்து, கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் 16ஆம் திகதி முதல் மீண்டும் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன் துறைக்கு ‘சிவகங்கை’ என்ற பெயரில் கப்பல் சேவை ஆரம்பமானது. 

இந்தநிலையில், வாரந்தோறும் சனிக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இருமார்க்கத்திலும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Article