இலங்கையில் தற்போது பரவிவரும் கொவிட் 19 புதிய திரிபினால் பாதிக்கப்பட்டு இதுவரையில் 02 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயம்ப பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின், பேராசிரியர் துஷாந்த மடேகெதர, சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார்.
9 முதல் 13 சதவீதம் வரையிலான சுவாச நோயாளிகள் புதிய கொவிட் திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இந்த கொவிட் 19 திரிபு தீவிரம் குறைந்தது என்ற காரணத்தினால், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, 65 வயதுக்கு மேற்பட்ட நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் எனவும் பேராசிரியர் துஷாந்த மடேகெதர அறிவுறுத்தியுள்ளார்.