இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருமதி மதிவதனி விவேகானந்தராஜா யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக 19/16 என்ற வாக்கெடுப்பின்படி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைக் கொண்டிருக்காத நிலையில், கட்சிகள் கூட்டணிகளை அமைத்து ஆட்சியைக் கைப்பற்ற முயற்சித்தன.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும், தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியன தலா 04 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றின.
இந்த நிலையில்,
இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் பதவிக்காகப் போட்டியிட்டன.
இதில்,
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருமதி மதிவதனி விவேகானந்தராஜா யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக 19/16 என்ற வாக்கெடுப்பின்படி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி நடுநிலை வகித்துள்ளதாக தெரியவந்துள்ளது.