நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியின் ப.மயூரன் மற்றும் உப தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியின் இ.ஜெயகரன் ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வெளிநடப்பு செய்துள்ளது.
குறித்த பதவிக்காலம் முதல் இரண்டு ஆண்டுகாலம் நீடிக்கும் என்றும் ஏனைய இரண்டு ஆண்டுகள் தமிழரசுக்கட்சி உறுப்பினர் ஒருவர் தவிசாளராக செயற்படுவார் என்று கட்சிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.