நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளுக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை தவறாகப் பயன்படுத்திய விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க இந்த குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அதன்படி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் குழுக்கள் சிறைச்சாலைகளில் பல ஆவணங்களைப் பரிசீலனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.