ஈபிடிபியுடன் சந்திக்க நடவடிக்கை; திட்டமிட்ட பொய்யான செய்தி என்று கஜேந்திரகுமார் அறிவிப்பு!

ஈபிடிபியுடன் சந்திக்க நடவடிக்கை; திட்டமிட்ட பொய்யான செய்தி என்று கஜேந்திரகுமார் அறிவிப்பு!

editor 2

இலங்கை தமிழரசுக்கட்சி ஈபிடிபி கூட்டை நியாயப்படுத்துவதற்காக எங்கள் கூட்டணியிலிருந்து ஒரு சிலர் குறிப்பாக சுரேஸ்பிரேமசந்திரனும் சித்தார்த்தனும் ஈபிடியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கப்போவதாகவும், அவர்களின் ஆதரவை ஆட்சியமைப்பதற்கு கோருவதற்கு நாங்கள் ஒரு சிலர் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று தெரிவித்துள்ளார்

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

எங்கள் கூட்டணியிலிருந்து ஒரு சிலர் குறிப்பாக சுரேஸ்பிரேமசந்திரனும் சித்தார்த்தனும் ஈபிடியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கப்போவதாகவும், அவர்களின் ஆதரவை ஆட்சியமைப்பதற்கு கோருவதற்கு நாங்கள் ஒரு சிலர் நடவடிக்கை எடுத்திருந்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அந்த செய்தி முற்றிலும் தவறானது. பொய்யான செய்தி , அந்த செய்தி திட்டமிட்ட வகையிலே , ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும்,தமிழ்தேசிய பேரவைக்கும் இடையில் நடைபெற்ற, கொள்கைரீதியிலான ஒப்பந்தத்தை கொச்சை படுத்துவதற்காக திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்யான அந்த செய்தியை நாங்கள் நிராகரிக்கின்றோம், கண்டிக்கின்றோம்.

இன்றைக்கு எங்களிற்கு நன்றாக தெரியக்கூடியதாகவுள்ளது என்னவென்றால் , அந்த செய்தி நன்கு திட்டமிடப்பட்டு பரப்பப்பட்டமைக்கான காரணம், தமிழரசுக்கட்சி ஈபிடிபியின் தலைவரை சந்திப்பதற்கு முடிவெடுத்திருந்த ஒரு நிலையில், அந்த பொய்ச்செய்தியை பரப்பிய ஊடகங்கள் தமிழரசுக்கட்சிக்கு மிகவும் விசுவாசமாக செயற்படுவதனால், தமிழரசுக்கட்சி ஈபிடிபியுடன் நடத்தவிருக்கின்ற சந்திப்பையும் அவர்களின் அந்த கூட்டையும் நியாயப்படுத்துவதற்காக தமிழ்தேசிய பேரவையும் ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியும் கூட ஈபிடிபியுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு தயாராகியிருந்தன , தமிழரசும் அதைத்தான் செய்தது , ஆனால் ஈபிடிபி இறுதியில் வந்து தமிழரசுடன் விரும்பியது என்பதை சுட்டிக்காட்டி அந்த கூட்டை நியாயப்படுத்துவதற்காக திட்டமிட்டு பரப்பப்பட்ட செய்தியாகும் என்று தெரிவித்தார்.

இதேவேளை,

குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக வெளியாகிய செய்தி உண்மைக்குப் புறம்பானது என்று தர்மலிங்கம் சித்தார்த்தனும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article