மட்டக்களப்பில் விபத்து! இளைஞர் மரணம்!

editor 2

மட்டக்ளகப்பு – ஆரையம்பதி பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை (05) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில், காத்தான்குடியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவின் தாழங்குடா பகுதியில், இரவு 11.00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரியவருகிறது.

விபத்துக்குள்ளான வான், கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்தபோது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இளைஞர் உயிரிழந்தார்.

அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொரு இளைஞர் தீவிர காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தையடுத்து காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share This Article