யாழ்ப்பாணம் நகரத்தை சேர்ந்த கிராம சேவையாளர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
4 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘பென் ட்ரைவ்’ ஒன்றை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டிலேயே குறித்த கிராமசேவகர் இலஞ்சம், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட கிராமசேவையாளர் சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம்
பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கைதானவர் யாழ்ப்பாணம் நகர் பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.