தமிழரசுக்கட்சி – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பில் இணக்கம் ஏற்படவில்லை!

தமிழரசுக்கட்சி - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சந்திப்பில் இணக்கம் ஏற்படவில்லை!

editor 2

உள்ளூராட்சிமன்றங்களில் ஆட்­சிய­மைப்பது குறித்து இலங்கை தமி­­ழ­ரசுக் கட்­சிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணிக்­கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முழு­மையான இணக்கம் எட்டப்­பட­வில்லை.

கொள்கை இணக்கப்பாடு அவசியம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தியதோடு தமிழரசுக் கட்சி பெரும்பான்மை பெற்ற சபைகளில் தாங்கள் ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையில் முழுமையான இணக்கப்பாடுகள் எட்டாத நிலையில் காணப்பட்டதோடு மீண்டும் சந்தித்து உரையாடுவதற்கும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

வட, கிழக்கு மாகா­ணங்­களில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் இணைந்து ஆட்­சி­ய­மைப்­பது குறித்துக் கலந்­து­ரை­யாடும் நோக்கில் இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சிக்கும், தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணிக்கும் இடை­யி­லான சந்­திப்பு வெள்­ளிக்­கி­ழமை (30) மாலை 6 மணிக்கு யாழ்ப்­பா­ணத்தில் உள்ள தனியார் விடு­தி­யொன்றில் நடை­பெற்­றது.

இச்­சந்­திப்பில் இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவ­ஞானம் மற்றும் பதில் செய­லாளர் எம்.ஏ.சுமந்­திரன் ஆகி­யோரும், தமிழ்த்­தே­சிய மக்கள் முன்­ன­ணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் மற்றும் பொதுச்­செ­ய­லாளர் செல்­வ­ராஜா கஜேந்­திரன் ஆகி­யோரும் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இதன்­போது வட, கிழக்கு மாகா­ணங்­களில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் இணைந்து ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான சாத்­தி­யப்­பா­டுகள் தொடர்பில் ஆரா­யப்­பட்­டது.

இச்­சந்­திப்­பின்­போது வட, கிழக்கு மாகா­ணங்­களில் சகல உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளிலும் தமிழ்த்­தே­சிய அர­சியல் கட்­சிகள் ஆட்­சி­ய­மைப்­பது அவ­சியம் என தமி­ழ­ர­சுக்­கட்­சியின் பிர­தி­நி­திகள் குறிப்­பிட்­ட­தா­கவும், அதன்­படி தமது இரு கட்­சி­களும் ஒத்­து­ழைப்­புடன் இணைந்து செயற்­பட்டால் அவ்­விரு மாகா­ணங்­க­ளிலும் கணி­ச­மான சபை­களில் பெரும்­பான்மை ஆச­னங்­களைக் கைப்­பற்­ற­மு­டியும் என அவர்கள் சுட்­டிக்­காட்­டி­ய­தா­கவும் கஜேந்­தி­ர­குமார் தெரி­வித்தார்.

அதற்குப் பதி­ல­ளிக்­கையில், இரு­த­ரப்­பி­ன­ருக்கும் இடையில் கொள்கை ரீதியில் இணக்­கப்­பாடு எட்­டப்­படும் பட்­சத்தில் இணைந்து ஆட்­சி­ய­மைக்க முடியும் எனவும், மாறாக வெறு­மனே தேர்­தலை இலக்­கா­க­வைத்து சபை­க­ளையும், பத­வி­க­ளையும் கைப்­பற்­று­வ­தற்­காக மாத்­திரம் கூட்­டி­ணை­ய­வேண்­டிய அவ­சியம் தமக்கு இல்லை எனவும் எடுத்­து­ரைத்­த­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

அத்­தோடு நடை­பெற்­று­மு­டிந்த உள்­ளூ­ராட்சி மன்­றத்­தேர்­தலில் தமிழ்த்­தே­சி­யத்தைப் பாது­காப்­ப­தற்கே தமிழ்­மக்கள் ஆணை வழங்­கி­யி­ருப்­ப­தா­கவும், எனவே தமிழ்த்­தே­சி­யத்தை முன்­னி­றுத்தி வாக்கு கோரிய சகல கட்­சி­களும் அதனைப் பாது­காத்து நடை­மு­றைப்­ப­டுத்தும் வகையில் இணைந்து செயற்­ப­ட­வேண்டும் எனவும் தான் தமி­ழ­ர­சுக்­கட்சிப் பிர­தி­நி­தி­க­ளிடம் வலி­யு­றுத்­தி­ய­தாக கஜேந்­தி­ர­குமார் கூறினார்.

இதே­வேளை இச்­சந்­திப்பு தொடர்பில் கருத்து வெளி­யிட்ட இலங்கைத் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ஏற்கனவே இரு கட்சிகளாலும் வெளியிடப்பட்ட நிலைப்பாடுகளுக்கு அமைய ஒவ்வொரு சபைகளிலும் கூடுதல் ஆசனங்களைப்பெற்ற கட்சி ஆட்சியமைப்பதற்கும், மற்றைய கட்சி அதற்கு ஆதரவு அளிப்பதற்கும் இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டதாகத் தெரிவித்தார்.

Share This Article