உயிர்த்த ஞாயிறு தின (ஈஸ்டர்) தாக்குதல்கள் குறித்து தற்போதைய அரசாங்கம் நடத்திவரும் விசாரணை தொடர்பில் இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,
2019ஆம் ஆண்டு நடந்த உயிர்த்த ஞாயிறு தினதாக்குதல் வழக்கை மூடிமறைப்பதற்கு எதிராக நாங்கள் உண்மையையும் நீதியையும் கோருகிறோம். உண்மையான குற்றவாளிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படும்வரை பாதிக்கப்பட்டவர்களும் நீதிக்காக காத்திருக்கிறார்கள்.
நாடு பொருளாதார ரீதியாகவும் பல வழிகளிலும் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இன்று மக்களிடையே ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை
உணர்வு இருக்கிறது.
நாட்டில் ஒரு பொறுப்பான அரசியல் வர்க்கமும் மக்கள் நம்பும் ஒரு ஜனாதிபதியும் இருக்கின்றனர். கத்தோலிக்க மக்களில் பெரும்பாலானோர் ஜனாதிபதியை ஆதரிக்கின்றனர். திருச்சபை அரசாங்கத்துடன் நல்ல உறவைப் பேணுகிறது.
ஒத்துழைப்புக்கான நல்ல வாய்ப்புகளும் இருக்கின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.