முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்வதற்காக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2021 ஆம் ஆண்டு தரமற்ற உரம் இறக்குமதி செய்யப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பிலேயே மகிந்தானந்தவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் இன்று இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.