உழவியந்திரத்தின் சக்கரத்தில் சிக்குண்டு யாழில் குடும்பஸ்தர் மரணம்!

உழவியந்திரதின் சக்கரத்தில் சிக்குண்டு யாழில் குடும்பஸ்தர் மரணம்!

editor 2

யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் உழவியந்திரத்தின் சக்கரத்தினுள் சிக்குண்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் தனீஸ்வரன் (வயது- 38) என்ற
ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குடும்பஸ்தர் நேற்று முன்தினம் தனது உழவியந்திரத்தின் கீழே இறங்கி நின்றபோது உழவியந்திரம் திடீரென இயங்க ஆரம்பித்தது. இந்த நிலையில் நிலைகுலைந்த குறித்த குடும்பஸ்தர் கீழே விழுந்ததால் அவர்மீது உழவியந்திரத்தின் சக்கரம் ஏறியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த குடும்பஸ்தர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Share This Article