தேர்தல் பிரசாரப் பணிகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

தேர்தல் பிரசாரப் பணிகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

editor 2

வாக்கெடுப்புக்கு நாற்பத்தெட்டு மணி நேரத்துக்கு முன்னர் அதாவது இன்று நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் போட்டி யிடுகின்ற கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் இறுதி அரசியல் பிரசாரக் கூட்டங்களின் வீடியோ காட்சிகள் மற்றும் விவரங்களை நாளை ஒவ்வொரு தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசையில் ஒரு பிரதான செய்தி அறிக்கையில் மாத்திரம் பிரசாரம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை வெளியாகின்ற செய்தித்தாள்களில் அக்கூட்டங்களின் புகைப்படங்களையும் அறிக்கைகளையும் வெளியிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளில் அன்றைய நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை வெளியிடும்போது நாளிதழ்களின் தலைப்புச் செய்தியை மட்டுமே வெளியிடவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share This Article