முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை ஜுலை மாதம் 23 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தன்னை கைது செய்து பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதற்குக் குற்றப்புலனாய்வு திணைக்களம் கொண்டு வந்துள்ள தீர்மானத்தால் தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பு வழங்கக் கோரி இந்த மனுவை பிள்ளையான் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு இன்று எஸ். துரைராசா உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் அழைக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி மன்றாடியார் இந்த மனு தொடர்பான எதிர்ப்பை சமர்ப்பிக்க இருவார கால அவகாசம் வழங்குமாறு கோரியிருந்தார்.
இந்நிலையிலேயே ஜுலை மாதம் 23 ஆம் திகதி குறித்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.