உயர்தரப் பரீட்சையில் மாணவர்கள் 9,457 பேர் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தி!

உயர்தரப் பரீட்சையில் மாணவர்கள் 9,457 பேர் மூன்று பாடங்களிலும் 'ஏ' சித்தி!

editor 2

இந்த ஆண்டு (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாணவர்கள் 9,457 பேர் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தியைப் பெற்றதாக பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர இன்று (27) தெரிவித்தார்.

மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் சதவீதம் 3.45 சதவீதம் என்றும் பரீட்சைகள் ஆணையர் நாயகம் தெரிவித்தார். கொழும்பில் சிறப்பு ஊடக சந்திப்பை நடத்தி உரையாற்றும் போதே அமித் ஜெயசுந்தர இவ்வாறு தெரிவித்தார்.

பெறுபேறுகளின்படி, பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளில் 64.73 சதவீதமானவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.

பல்கலைக்கழக நுழைவுக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், 2023 ஆம் ஆண்டில் 64.33 சதவீதத்தை எட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு பரீட்சார்த்திகள் 274,361 பேர் தோற்றியதாகவும், அவர்களில் 177,588 பேர் பல்கலைக்கழக நுழைவுக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், தேர்வில்பாடசாலை பரீட்சார்த்திகள் 222,774 பேரும் தனியார் பரீட்சார்த்திகள் 51,587 பேரும் பங்கேற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share This Article