சமையல் எரிவாயு கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
கிளிநொச்சி – மருதநகரை சேர்ந்த பரசுராமன பரமேஸ்வரி (வயது 59) என்பவரே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
உயிரிழந்த பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது சிலிண்டர் கசிந்து அதிலிருந்த எரிவாயு வெளியேறியுள்ளது. இதனால் பரவிய தீ அவரின் ஆடையில் பற்றியது. இதில் அவர் படுகாயமடைந்தார்.
கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று
செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.