ஞானசார தேரர் தெரிந்த தகவல்களை புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவிக்க வேண்டும் – அரசாங்கம்!

ஞானசார தேரர் தெரிந்த தகவல்களை புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவிக்க வேண்டும் - அரசாங்கம்!

editor 2

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பில் முக்கிய தகவல்களை அறிந்திருந்தால் அவை தொடர்பில் புலனாய்வு பிரிவுக்கு அறிவிக்க வேண்டியது ஞானசார தேரரின் கடமை. அதனை விடுத்து செய்தியாளர் மாநாடுகளில் அவை தொடர்பில் கூறிக் கொண்டிருப்பது பொருத்தமற்றது – என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில்
இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புலனாய்வுத்துறை ஊடாக அரசாங்கம், மத அடிப்படைவாதத்தைப் பரப்பும் குழுக்கள் தொடர்பில் ஆராய்ந்து அது குறித்த தகவல்களை பாராளுமன்றிலும் பாராளுமன்றத்துக்கு வெளியிலும் வெளிப்படுத்தியது. உரிய நேரத்தில் அவ்வாறானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பில் முக்கிய தகவல்களை அறிந்திருந்தால் அவை தொடர்பில் புலனாய்வு பிரிவுக்கு அறிவிக்க வேண்டியது ஞானசார தேரரின் கடமையாகும்.

விசாரணைகள் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படுபவை அல்ல. அவை பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவாலேயே முன்னெடுக்கப்படும்.

ஞானசார தேரருக்கு புலனாய்வு பிரிவில் உள்ளவர்கள் யார் என்பது தெரியும். அந்த வகையில் தன்னிட முள்ள தகவல்கள் தொடர்பில் அவரால் நேரடியாக புலனாய்வு பிரிவுக்கு தெரிவிக்க முடியும்.

வழங்கப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு புலனாய்வுப்பிரிவு விசாரணைகளை முன்னெடுக்கும் என்றார்.

Share This Article