திருமலை கடலில் மூழ்கிய இளைஞரின் சடலம் மீட்பு!

திருமலை கடலில் மூழ்கிய இளைஞரின் சடலம் மீட்பு!

editor 2

திருகோணமலை கடலில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம் நேற்றுக் காலை மீட்கப்பட்டது.

திருகோணமலை நகர் கடற்பகுதியில் நண்பர்கள் நால்வர் கடலில் குளித்துக்கொண்டிந்தபோது கடல் அலையில் சிக்கி அள்ளுண்டு போயினர்.

இதில் மூவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன் காணாமல் போன இளைஞனை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையிலேயே குறித்த இளைஞனின் சடலம் கடலில் மிதந்த நிலையில் நேற்றுக் காலை மீட்கப்பட்டது.

மீட்கப்பட்டவர் திருகோணமலை – சீனக்குடா பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஆவார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர.

Share This Article