கணவாய் பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் மயங்கி வீழ்ந்து மரணம்!

கணவாய் பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் மயங்கி வீழ்ந்து மரணம்!

editor 2

யாழ்ப்பாணத்தில் கணவாய் பிடிப்பதற்கு கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார்.

நேற்று சனிக்கிழமை காக்கைதீவு கடல் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில், அதே இடத்தைச் சேர்ந்த கனகராசா சுரேஷ்குமார் (வயது39) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,

உயிரிழந்த மீனவர் மேலும் நால்வருடன் கணவாய் பிடிப்பதற்கு தடி நடுவதற்காக படகில் சென்றுள்ளார். அப்போது திடீரென மயக்கமடைந்தார். அவருடன் சென்றவர்கள் யாழ். போதனா மருத்துவமனையில் அவரை சேர்ப்பித்தனர்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார்
என்று தெரிவித்தனர். அவரின் மரணத்துக்கு மாரடைப்பே காரணம் என்று
பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Share This Article