மாதகல் கடற்பரப்பில் விபத்து! இளம் மீனவர் ஒருவரைக் காணவில்லை!

மாதகல் கடற்பரப்பில் விபத்து! இளம் மீனவர் ஒருவரைக் காணவில்லை!

editor 2

இளம் மீனவர்கள் இருவர் தொழிலுக்கு சென்ற படகு விபத்துக்குள்ளாகி கவிழ்ந்ததில் ஒருவர் காப்பாற்றப்பட்டார். மற்றொருவர் காணாமல் போயுள்ளார்.

மாதகல் கடற்பரப்பில் நேற்று புதன்கிழமை அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில், அதே இடத்தைச் சேர்ந்த நாகராசா பகீரதன் (வயது 21) என்பவரே காணாமல் போயுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் அறியவருவதாவது,

நேற்று புதன்கிழமை அதிகாலை இருவரும் மீன் பிடிப்பதற்காக தமது படகில் கடலுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், திடீரென விபத்துக்குள்ளாகி படகு கவிழ்ந்துள்ளது. இதில், இருவரும் கடலில் வீழ்ந்தனர். ஒருவர் நீந்திக்கொண்டிருந்த நிலையில் சக மீனவர்களால் காப்பாற்றப்பட்டார்.

மற்றையவர் காணாமல் போயுள்ளார். காணாமல் போனவரை தேடும் நடவடிக்கையில் மீனவர்களும் கடற்படையினரும் ஈடுபட்டனர். எனினும், நேற்று
மாலை வரை காணாமல் போனவர் மீட்கப்படவில்லை.

Share This Article