யாழ்.,கிளிநொச்சியைச் சேர்ந்த மூவர் பெங்களூரில் கைது!

யாழ்.,கிளிநொச்சியைச் சேர்ந்த மூவர் பெங்களூரில் கைது!

editor 2

யாழ்ப்பாணம், கிளிநொச்சியை சேர்ந்த மூவர் இந்தியாவின் பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து 12 கோடி ரூபாய்க்கும் அதிகமான தங்கக் கட்டிகளும் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன என்று பெங்களூர் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாக பெங்களூர் விமான நிலையத்தை சென்றடைந்தபோதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களிடம் இருந்து 3.23 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் மூவரும் தமது ஆசனவாயில் போதைப் பொருளை மறைத்து கடத்தினர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Share This Article