மாவை சேனாதிராசாவை படுகொலை செய்ய முயன்ற ஒட்டுக்குழு தலைவரே டக்ளஸ் – சபையில் சிறிதரன் எம்.பி!

மாவை சேனாதிராசாவை படுகொலை செய்ய முயன்ற ஒட்டுக்குழு தலைவரே டக்ளஸ் - சபையில் சிறிதரன் எம்.பி!

editor 2

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இயங்குதளத்தையும் மக்கள் அபிமானத்தையும் சிதையாமல் காத்த மாவை சோ. சேனாதிராசாவை படுகொலை செய்யமுயன்ற ஒட்டுக்குழு தலைவரே டக்ளஸ் தேவானந்தா – இவ்வாறு
தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர்
சி.சிறீதரன் எம். பி.

நேற்றைய தினம் பாராளுமன்றில் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை. சேனாதிராசாவின் அனுதாப பிரேரணையில் உரையாற்றிய போதே
அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், அவர் தனது உரையில்,

ஊர்காவற்றுறை மக்களை சந்திக்கச் சென்ற மாவை சேனாதிராசா, எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் மீது தமிழின
படுகொலைகளை புரிந்த இலங்கை அரசின் பங்காளியான டக்ளஸ் தேவானந்தாவும் அவரின் ஆயுதக்குழுவினரும் 2001-11.28ஆம் திகதி நாரந்தனை –
தம்பாட்டி பகுதியில் வைத்து தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் ஏரம்பு பேரம்பலம், யோகசிங்கம் கமல்ஸ்ரோங் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

அத்துடன், 28 பேர் படுகாயமடைந்தனர். மாவை சேனாதிராசா கொட்டன் பொல்லுகளாலும், துப்பாக்கிகளாலும் வாள்களாலும் சுட்டும், வெட்டியும் அடித்தும் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு, நினைவிழக்குமளவு காயமடைந்திருந்தார் – என்றும் சிறீதரன் எம்.பி. தனது உரையில் தெரிவித்திருந்தார்.

Share This Article