ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்கு ஐரோ.ஒன்றியத்தின் பிரதிநிதி!

ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்கு ஐரோ.ஒன்றியத்தின் பிரதிநிதி!

editor 2

செப்.21ஆம் திகதி நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியாக நாச்சோ
சான்செஸ் அமோர் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின்
அழைப்பை ஏற்றே ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரான சான்செஸ்
அமோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சான்செஸ் அமோர் ஸ்பெயினை சேர்ந்தவர். 2019ஆம் ஆண்டு மொசம்
பிக்கில் நடந்த பொதுத் தேர்தலையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில்
இவரே கண்காணித்திருந்தார்.

கடந்த காலங்களில் நடந்த நாட்டின் 6 தேர்தல்களில் ஐரோப்பிய ஒன்றியம்
தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Article