இனப்பிரச்னை தீர்க்கப்படும்வரை நாட்டை கட்டியெழுப்ப முடியாது – ராஜித!

இனப்பிரச்னை தீர்க்கப்படும்வரை நாட்டை கட்டியெழுப்ப முடியாது - ராஜித!

editor 2

‘இனப்பிரச்னை தீர்க்கப்படும்வரை இந்நாட்டை கட்டியெழுப்ப முடியாது.’ – என்று ஐக்கிய மக்கள் சக்தி யின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்நாட்டில் இனப்பிரச்னை தீர்க்கப்பட வேண்டும், அனைத்து இன மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். இப்பிரச்னையை தீர்க்காவிடின் நாட்டை கட்டியெழுப்ப முடியாது.

இனப்பிரச்னை இருந்தது,

அதனை தீர்த்தாலேயே சிங்கப்பூரை கட்டியெழுப்ப முடிந்தது என லீ குவான்
குறிப்பிட்டார்.

தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் எம்மிடம் இல்லை. தாய்நாடு முக்கியம். எனவே,
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரம சிங்கவை வெற்றி பெற வைக்கும்வரை
ஓயமாட்டேன். செப்ரெம்பர் 21 ஆம் திகதி அவர் நிச்சயம் ஜனாதிபதியாவார்- என்றார்.

Share This Article