அரசியலிலிருந்து ஓய்வு பெறுகிறார் வாசுதேவ!

editor 2

செயற்பாட்டு அரசியலில் இருந்து விலகுவதற்கு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் முன்னாள் தலைவரும், இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தீர்மானித்துள்ளார்.

இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாகவே ஜனநாயக இடதுசாரி முன்னணிக்கு புதிய தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிரேஷன் பிரேமரத்ன அண்மையில் நியமிக்கப்பட்டார்.

தனது உடல்நிலையைக் கருத்திற் கொண்டே வாசுதேவ நாணயக்கார,
அரசியலுக்கு விடை கொடுக்கும் முடிவை எடுத்துள்ளார். இதன்படி அடுத்த
பொதுத் தேர்தலிலும் அவர் போட்டியிடமாட்டார்.

Share This Article