பிரான்ஸ் அனுப்புவதாக மோசடி! நபரைத் தாக்கிய பாதிக்கப்பட்டோர் கைது!

பிரான்ஸ் அனுப்புவதாக மோசடி! நபரைத் தாக்கிய பாதிக்கப்பட்டோர் கைது!

editor 2

வெளிநாட்டுக்கு அனுப்பிவைப்பதாகக்கூறி ஏமாற்றிய நபரை தாக்கி அவரிடம் இருந்து ஐந்து இலட்சம் ரூபாயை பறித்த குற்றச்சாட்டில் சகோதரர்கள்
இருவரை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸூக்கு செல்வதற்காக நீர் கொழும்பு பகுதியை சேர்ந்த நபர் ஒருவரிடம் 25 இலட்சம் ரூபாயை வழங்கியுள்ளார்.

பணத்தை பெற்றவர் அவரை சிங்கப்பூருக்கு அழைத்து சென்று விட்டு, மீண்டும் இலங்கை அழைத்து வந்துள்ளார்.

மீண்டும் பிரான்ஸூக்கு அனுப்பி வைப்பதாகக்கூறி நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் இளைஞரை பிரான்ஸூக்கு அனுப்பி வைப்பதாகக் கூறிய நபர் யாழ்ப்பாணம் வந்துள்ளார். இதனை அறிந்த பாதிக்கப்பட்ட இளைஞரும் அவரின் சகோதரனும் அந்த நபருடன் முரண்பட்டு – அவரை தாக்கியுள்ளனர்.

அத்துடன், அவரிடமிருந்த 5 இலட்சம் ரூபாயையும் பறித்துள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான நபர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, முறைப்பாட்டின் பிரகாரம் தாக்குதல் நடத்திய சசோதரர்கள் இருவரையும் கைது செய்து விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் நேற்று
முன்தினம் முற்படுத்தினர்.

இதன்போது, இருவருரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Share This Article