குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் யாழில் பெண் கைது!

குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் யாழில் பெண் கைது!

editor 2

யாழ்ப்பாணம் – அளவெட்டி பகுதியில் பிறந்து 45 நாட்களேயான குழந்தையொன்றை கொலைச் செய்ததாகக் கூறப்படும் தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் மயக்கமுற்ற நிலையில் குறித்த குழந்தை, அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தது.

குறித்த குழந்தையின் பிரேதப் பரிசோதனை இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றதுடன், அந்தக் குழந்தை, தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேகநபரான அந்த குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share This Article