மஹிந்தவை மூடிய அறையில் சந்தித்தார் ரணில்!

மஹிந்தவை மூடிய அறையில் சந்தித்தார் ரணில்!

editor 2

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நேரில் சென்று சந்தித்துள்ளார். 

கொழும்பு – விஜேராமவில் உள்ள மகிந்தவின் இல்லத்தில் இன்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இருவருக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு மூடிய அறைச் சந்திப்பாக அமைந்திருந்தாக கூறப்படுகிறது. 

இதன்போது கலந்துரையாடப்பட்ட விபரங்கள் எதுவும் இதுவரையில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழு நாளை தமது ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்யவுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article