இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேக்ரிடத்தில் வடக்கு, கிழக்கு அரசியல், சிவில் தரப்பினர் கூட்டிணைந்து மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறே வலியுறுத்த வேண்டும் என்று இராஜதந்திரியும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயத்திலக வலியுறுத்தியுள்ளார்.
பொறுப்புக்கூறலை முன்னிலைப்படுத்திய கோரிக்கைளை முன்னெடுத்தால் ஆட்சியில் உள்ள அநுர அரசாங்கம் சுயாட்சிக்கோரிக்கைக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருடைய விஜயம் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு தீர்மானித்திருப்பது முக்கியமானதொரு விடயமாகும். அவர் அவ்வாறு வருகைதருகின்றபோது உள்நாட்டில் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்துவது இயல்பானது.
அவ்வாறான நிலையில், வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல், சிவில் பிரமுகர்கள் இந்த விடயத்தினை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியது மிக முக்கியமானதொரு விடயமாகும்.
தற்போதைய நிலையில் ஆட்சியில் உள்ள அரசாங்கம் அதிகாரப்பகிர்வு தொடர்பாகவோ, பொறுப்புக்கூறல்தொடர்பாகவே எவ்விதமான கரிசனைகளையும் கொண்டிருப்பதாக வெளிப்படுத்தவில்லை.
அவ்வாறான நிலையில் மாகாண சபைகளுக்கான தேர்தலே அதிகாரப்பகிர்வுக்கான ஆரம்பமாக இருக்கின்றது. அதனை எட்டு ஆண்டுகளாக நடத்தப்படாது இருக்கும் நிலையே காணப்படுகின்றது.
டில்லிக்கும், கொழும்புக்கும் இடையிலான உறவுகளால் மாகாண சபைகளுக்கான வலியுறுத்தல் பிரதமர் மோடியின் விஜயத்தில் காணமாலக்கப்பட்டுள்ளது. இது மிகப்பாரதூரமான விடயமாகும்.
ஆகவே ஐ.நா.உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு வருகின்ற சந்தர்ப்பத்தில் இந்த நாட்டில் அனைத்துப்பிரச்சினைகளுக்கும் அரசியல் ரீதியான தீர்வு தான் அடிப்படையாக இருக்கின்றது என்பதை உணர்த்துவதோடு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவதற்கான அழுத்தங்களை பிரயோகிக்குமாறே கூட்டுக் கோரிக்கை முன்வைக்க வேண்டும்.
அதன்மூலமாகவே சுயாட்சிரூபவ் அதிகாரப்பகிர்வுரூபவ் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட தமிழ் மக்களின் நீண்டகாலக்கோரிக்கைகளை நோக்கி நகரமுடியும். இதனைவிடுத்து பொறுப்புக்கூறல் விடயத்தினை முன்வைக்கின்றபோது தென்னிலங்கையில் மீண்டும் தேசியவாத சக்திகள் தீவிரமாக தலையெடுக்கும்.
ஆவ்விதமான சூழல் ஏற்பட்டால் அரசங்கம் சுயாட்சி என்பதை உச்சரிக்க முடியாத அளவுக்கு கடுமையாக நடந்துகோள்வதற்கு வாய்ப்புக்களே அகதிகமுள்ளன. காரணம்ரூபவ் பாராளுமன்ற பெரும்பான்மை மற்றும் நிறைவேற்று அதிகாரம் அதற்கு காரணமாகின்றன. ஆகவே ஐ.நா.உயர்ஸ்தானிகரின் வருகையை எதிர்காலத்தை மையப்படுத்தி பயன்படுத்துவதற்கு தீர்மானிக்க வேண்டும் என்றார்.