திருமலையில் கேரள கஞ்சாவுடன் பெண் கைது!

திருமலையில் கேரள கஞ்சாவுடன் பெண் கைது!

editor 2

திருகோணமலை தம்பலகாமம் பிரிவுக்குட்பட்ட 99ஆம் கொலனி பிரதேசத்தில் 500 கிராம் கேரள கஞ்சாவுடன் பெண்ணொருவர் வெள்ளிக்கிழமை (26) போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் ஹைரியா நகர் புல்மோட்டை – 1 என்ற பகுதியில் வசிக்கும் 44 வயது பெண் ஆவார்.

விற்பனை செய்வதற்காக 500 கிராம் கேரள கஞ்சாவை தம் வசம் வைத்திருந்தபோதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண் கடந்த வெள்ளிக்கிழமை கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share This Article