நயினாதீவிற்கு பொருட்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! ஒருவர் மரணம்!

நயினாதீவிற்கு பொருட்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! ஒருவர் மரணம்!

editor 2

குறிகாட்டுவானில் இருந்து நயினாதீவுக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

புங்குடுதீவு 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த இந்திரலிங்கம் அருண் (கோபி) என்ற 42 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் இரவு செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,

குறிகாட்டுவானிலிருந்து நயினாதீவுக்கு இடையில் பொருள்கள் ஏற்றி இறக்கும் சேவையில் ஈடுபட்ட படகு ஒன்று தொழிலாளர்கள் நால்வருடன் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு பயணித்தது நடுக்கடலில் படகு பயணித்துக் கொண்டிருந்தபோது கவிழ்ந்தது. இதனால், அதில் சென்ற நால்வரும் கடலில் விழுந்தனர்.

அவர்கள் கரையை நோக்கி நீந்தியநிலையில் கிராம மக்களின் உதவியுடன் மூவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

எனினும், ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. ஊர்காற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article