காட்டு யானை தாக்கியதில் 07 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், அவரின் தந்தை காயமடைந்துள்ளார்.
திருகோணமலை குமரன்கடவை அருகே இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த சிறுமியை தந்தை சைக்கிளில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது காட்டு யானை தாக்கியுள்ளது.
இதில், சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தந்தை காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பில் குமரன்கடவை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.