நோர்வே நாட்டின் ‘டாக்டர் ப்ரிட்ஜோப் நான்சன்’ என்ற ஆய்வுக் கப்பலின்
இலங்கை வருகைக்கான கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
உலக நாடுகளின் ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதை மையப்படுத்தி ஏற்பட்ட புவிசார் அரசியல் நெருக்கடி, இராஜதந்திர அழுத்தங்களால் ஆய்வு கப்பல்கள் இலங்கை வருவதற்கு தடை விதிக்கப் பட்டிருந்தது.
எதிர்வரும் டிசெம்பர் 31ஆம் திகதி வரை இந்தத் தடை நடைமுறையில் இருக்கும். எனவே, இதனை காரணம் காட்டியே நோர்வே ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
நோர்வேயின் ஆய்வுக் கப்பலான டாக்டர் ப்ரிட்ஜோப் நான்சன் கடல்சார் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது.
கடலுக் கடியில் தானியக்க வாகனங்களை பயன்படுத்துவது உட் பட சிக்கலான,
பல்துறை ஆராய்ச்சிகளை இந்தக் கப்பல் முன்னெடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.