வடக்கு, மேல் மாகாணங்களில் டெங்கு அபாயம் அதிகரிப்பு!

வடக்கு, மேல் மாகாணங்களில் டெங்கு அபாயம் அதிகரிப்பு!

editor 2

வடக்கு, மேல் மாகாணங்களில் டெங்கு நோய்பரவும் அபாயம் அதிகரித்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் ஜனவரி மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரையான காலப்பகுதிக்குள் 28 ஆயிரத்து 239 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, யாழ்ப்பாணத்தில் 3,974, கொழும்பில் 6,344, கம்பஹாவில் 2,820 டெங்கு நோயாளர்களும் பதிவாகினர்.

இந்த ஆண்டில் 10 டெங்கு மரணங்களும் இடம்பெற்றன என்றும் நேற்று
வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Share This Article