ஜனாதிபதியின் பொது மன்னிப்பு என்ற போர்வையில் கைதிகள் 68 பேர் விடுதலை!

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு என்ற போர்வையில் கைதிகள் 68 பேர் விடுதலை!

editor 2

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு என்ற போர்வையில் கைதிகள் 68 பேர்
சட்டவிரோதமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனரென விசாரணைகளில்
தெரியவந்துள்ளதாக, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நேற்று கொழும்பு
நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார கைதிகள் சட்டவிரோதமாக விடு
தலை செய்யப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சிறைச்சாலைகள்
ஆணையாளர் நாயகம் துஷார நிஷாந்த உபுல்தெனிய நேற்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு பெற்றமையை குறிக்கும் போலி ஆவணங்களை சமர்ப்பித்தாரென உபுல் தெனியமீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதன்போது, மேலதிக சொலி சிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் சமர்ப்
பணங்களை முன் வைத்தார். இதன்போதே மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், 2024ஆம் ஆண்டு நத்தார் பண்டிகையின்போது 57 கைதிகளும், கடந்த பெப்ரவரி 04 சுதந்திர தினத்தன்று கைதிகள் 11 பேரும் தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத போதிலும் சட்டவிரோதமாக விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும், கடந்த வெசாக் பண்டிகையின்போது 29 சிறைகளிலிருந்து கைதிகள் 388 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இவர்களில் குறைந்தது இருவர் சட்டவிரோதமாக விடுதலை செய்யப்பட்டனர்.


சிறைச்சாலைகள், சட்ட அமுலாக்க அமைப்புகளின் பெரும் தோல்வியை இந்த கண்டுபிடிப்புகள் பிரதிபலிக்கினறன.

சட்டவிரோத நடைமுறைகள், அதிகார துஷ்பிரயோகம் வேரூன்றத் தொடங்கியுள்ளன என்று இதன்போது, எச்சரித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், இவ்வாறான சட்டவிரோத வலையமைப்புகளை அகற்றுவதில் சட்டமா அதிபர் திணைக்களம் விசாரணை அதிகாரிகளை ஆதரிக்க வேண்டும் என்று நீதித்துறையிடம் கோரினார்.

தவிர, நாடு முழுவதும் உள்ள மூத்த சிறை அதிகாரிகள், நிர்வாகிகளின் சொத்துகள், நிதி அறிவிப்புகள் குறித்து தனித்தனியான விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கு மாறாக நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத கைதி ஒருவர் கடந்த வெசாக் பண்டிகையின்போது விடுதலை செய்யப்பட்டார்.

இந்த விடயம் பேசுபொருளானதையடுத்து, கடந்த 6ஆம் திகதி ஜனாதிபதியின் மூத்த மேலதிக செயலாளர் எழுத்துபூர்வமாக அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து சி. ஐ. டி. விசாரணையை தொடங்கியது.

மறுநாள் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அத்துல திலகரட்ண என்ற கைதி சட்டவிரோதமாக விடுதலை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது. இந்த சிறைச்சாலையிலேயே மற்றொரு கைதியும் இவ்வாறு முறையற்ற விதத்தில் விடுதலை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது. இதைத்
தொடர்ந்து, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உபுல்தெனிய கைது
செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This Article