மின்சார கட்டண திருத்தம் இந்த வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த ஆணைக்குழுவின் தொடர்பாடல்பிரிவு பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் மேலும் கூறுகையில்,
மின்சார சபை முன்வைத்த முன்மொழிவு தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை பெற்ற பின்னர், மீளாய்வு நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளன.
2025ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்காக இலங்கை மின்சார சபை முன்வைத்த மின்சார கட்டண திருத்த முன்மொழிவு, அதாவது, 18.3 சதவீத உயர்வு முன் மொழிவு தொடர்பாக பொதுமக்கள் ஆலோசனை செயல்முறை நடைபெற்றது. இதன் போது பொதுமக்களால் வழங்கப்பட்ட எழுத்து, வாய்மொழி கருத்துகள், முன்மொழிவுகள் ஆய்வு செய்யப்பட்டு, இறுதிக் கட்டத்தில் உள்ளது.
அத்துடன், முன்மொழிவு கட்டண முறைமையுடனான இணக்கத்தன்மை குறித்த மீளாய்வு நடவடிக்கைகளும் இறுதிக் கட்டத்தில் உள்ளன. எனவே, பெரும்பாலும் இந்த வாரத்துக்குள், அடுத்த பாதி ஆண்டுக்கு செயல்படுத்தப்படவுள்ள மின்சார கட்டணங்கள் எவை, அவை எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்த இறுதி முடிவை அறிவிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த வாரத்துக்குள் பெரும்பாலும் இறுதி முடிவை அறிவிக்க முடியும்’, என்றார்.
இதேசமயம், மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட முன்மொழிவின் மூலம், அரசாங்கம் மின்சார சபையை தனியார் மயமாக்கநடவடிக்கை எடுத்து வருவதாக ஒருங்கிணைந்த மின்சார ஊழியர்
சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அந்த சங்கத்தின் செயலாளர் எல்.பி.கே. குமாமுல்ல, கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
மேலும், மின்சார சபையை 6 தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது – என்றும் அவர் கூறினார்.