இரணைமடுக்குளத்தில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கினார்!

இரணைமடுக்குளத்தில் நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கினார்!

editor 2

இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமல் போன நிலையில் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றது.

கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தில் நீராடுவதற்காக நண்பர்களுடன் சென்றிருந்த நிலையில் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 11.30 மணியளவில் நீராடச் சென்றவர்களில் செல்வரத்தினம் றுசாந்தன் எனும் 14 வயதுடைய சிறுவன் நீர்ல் மூழ்கியதையடுத்து அருகில் உள்ள இராணுவ முகாமிற்கும், உறவினர்களிற்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சிறுவளை தேடும் பணியில் இரணைமடு மீனவர்களுகும், பிரதேச மக்களுமாக ஈடுபட்டிருந்தனர்.

குறித்த சிறுவன் திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி கற்று வருவதுடன், முறிகண்டி வசந்தநகர் பகுதியில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share This Article