நீர்வேலிப் பகுதியில் விபத்து! இளைஞர் மரணம்!

நீர்வேலிப் பகுதியில் விபத்து! இளைஞர் மரணம்!

Editor 1

யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவியந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த விபத்து நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணியளவில் நீர்வேலியில் இடம்பெற்றது.

இதில், புத்தூர் கிழக்கை சேர்ந்த கலைப்பிரியன் (வயது17) என்பவரே உயிரிழந்தார்.

நீர்வேலி – வில்லுமதவடி பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,

உயிரிழந்தவர், கைதடியில் மின்னொளியில் நடந்த கரப்பந்தாட்டப் போட்டியை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, வீதியின் கரையில் நிறுத்தப்பட்டிருந்த உழவியந்திரத்துடன் மோதுண்டு விபத்து இடம்பெற்றுள்ளது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article