தொலைத்தொடர்பு சாதனத்துடன் யாழில் மரப்பெட்டி ஒன்று கரையொதுங்கியது!

தொலைத்தொடர்பு சாதனத்துடன் யாழில் மரப்பெட்டி ஒன்று கரையொதுங்கியது!

Editor 1

யாழ்ப்பாணத்தில் கடலில் அடித்து வரப்பட்டு , கரையொதுங்கிய மர்ம பெட்டி ஒன்றில் இருந்து தொலைத்தொடர்பு சாதனம் மீட்கப்பட்டுள்ளது. 

அல்லைப்பிட்டி கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டி ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) கரையொதுங்கியுள்ளது. 

அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் கரையொதுங்கிய பெட்டியை திறந்து பார்த்த வேளை அதனுள் தொலைத்தொடர்பு சாதனம் ஒன்று காணப்பட்டுள்ளது. 

அதனை மீட்டு பொலிஸ் நிலையம் எடுத்து சென்றுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share This Article