வெளிநாட்டில் தொழில் பெற்றுத்தருவதாக மோசடி! பெண் கைது!

வெளிநாட்டில் தொழில் பெற்றுத்தருவதாக மோசடி! பெண் கைது!

Editor 1

கட்டாரில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகளினால் 37 வயதுடைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் 40 இலட்சம் ரூபாவிற்கும் அதிக நிதி மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பிரித்தானியாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட இலங்கை யுவதி ஒருவரும் அவருக்கு உதவிய தரகர் ஒருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share This Article