ஐக்கிய மக்கள் சக்தி – ஜனாதிபதி பேச்சு என்பது அப்பட்டமான பொய் என்கிறார் சஜித்!

ஐக்கிய மக்கள் சக்தி - ஜனாதிபதி பேச்சு என்பது அப்பட்டமான பொய் என்கிறார் சஜித்!

Editor 1

ஐக்கிய மக்கள் சக்திக்கும் ஜனாதிபதிக்கும் பேச்சு நடந்து வருவதாக வாய்ச்சொல் தலைவர் லண்டன் சென்று குறிப்பிட்டுள்ளார். இது அப்பட்டமான பொய். திசைகாட்டிக்கும் யானைக்கும் இடையிலான ‘டீலே’ இன்று நாட்டிலேயே மிகப் பெரிய ‘டீல்’ சமீபத்தில் சுயாதீன தொலைக்காட்சியில் நிகழ்த்தப்பட்ட நாடகம் இதை நிரூபித்துள்ளது – இவ்வாறு கூறியுள்ளார் எதிர்க் கட்சித் தலைவர் சஜித பிரேமதாஸ.

52 நாள் அரசியல் சூழ்ச்சி இடம் பெற்ற காலப்பகுதியில் பிரதமராக பதவி ஏற்குமாறு 71 தடவை அழைப்பு விடுத்த போது தான் கொள்கை சார்ந்த அரசியலை முன்னெடுத்து வருவதால், அதனை நிராகரித்தேன். மக்களின் ஆசியுடனயே நான் பதவிக்கு செல்வேன் என்று குறிப்பிட்டேன்.

நாட்டை வங்குரோத்தாக்கிய ராஜபக்ஷர்களின் பாதுகாவலராக இருக்க விரும்பாத காரணத்தால்தான் பின்னர் ஏற்பட்ட போராட்ட காலப்பகுதியில் பிரதமர் பதவியையோ அல்லது ஜனாதிபதி பதவியையோ ஏற்க மறுத்தேன்.

பூரண முடியாட்சியை தருவதாகக் கூறினாலும் நாட்டை வங்குரோத்து செய்தவர்களுடன் சஜித் பிரேமதாஸவுக்கு டீல் இல்லை. டீல் போடவும்
மாட்டோம்.

இந்நாட்டின் 220 இலட்சம் மக்களுடன்தான் எனக்கு டீல் இருக்கிறது என்றும் சஜித் பிரேமதாஸ நேற்று அநுராதபுரத்தில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் தெரிவித்தார்.

Share This Article