காரைதீவைச் சேர்ந்த மற்றொரு மருத்துவரும் நீரில் மூழ்கி மரணம்!

காரைதீவைச் சேர்ந்த மற்றொரு மருத்துவரும் நீரில் மூழ்கி மரணம்!

Editor 1

உகந்தை மலை முருகன் ஆலயத்தில் இருந்து வரும் வழியில் பாணமை கட லில் தவறி விழுந்த மருத்துவர் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்தார்.

அம்பாறை மாவட்டம் – காரைதீவை சொந்த இடமாக கொண்ட இ. தக்சிதன் என்ற மருத்துவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இவருடைய சடலம் மரண பரிசோதனைக்காக பாணமை வைத்திய
சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றி வந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை காரைதீவைச் சேர்ந்த மருத்துவபீடத்திற்குத் தெரிவாகியிருந்த மாணவன் சிவகரன் அக்சயன் (20) நீராடச் சென்றபோது நீர் நிலை ஒன்றில் மூழ்கி உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share This Article