இலங்கை – பங்களாதேஷ் இடையில் பயணிகள் படகுச் சேவை!

இலங்கை - பங்களாதேஷ் இடையில் பயணிகள் படகுச் சேவை!

Editor 1

இலங்கைக்கும் பங்களாதேஷூக்கும் இடையில் விரைவில் பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவுக்கும் பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனாவுக்கும் இடையிலான இரு தரப்பு கலந்துரையாடல் டில்லியில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது,

இரு நாடுகளுக்கும் இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கூடிய விரைவில் கைச்சாத்திடப்படும் என ஜனாதிபதி ரணில், பங்களாதேஷ் பிரதமருக்கு தெரிவித்தார்.

அத்துடன் இலங்கைக்கும் பங்களாதேஷூக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்க இந்தக் கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Share This Article